Tuesday, June 22, 2010

மச்சம் !

உன்
உதட்டருகே
உலா வந்து
உயிர் வாங்குதே மச்சம்..
சத்தியமாய் நீயின்றி மனசுக்குள்
ஏதுமில்லை மிச்சம்!

நிலவுப்பெண்ணே!

நிலவுப்பெண்ணே
எத்தனை ஆயிரம் நட்சத்திரக் காதலர்கள்
உன் கடைக்கண் பார்வை கேட்டு
தவமுடன் ஏங்க...
நீயோ
யாரை எண்ணி உடல் மெலிவதும்
பின் பூரிப்பதும்???

மாற்றம் !

வஞ்சியே!
உனை இதயம் ஏற்ற போது
பூக்கடையாகத்தான இருந்தது..
உன் பிரிவு தந்த சோகத்தின் பின்
சாக்கடையாகிப்போனது!

துரோகம் !

உன் ப்ரியத்தை
கடித்தில் உள்ளடக்காதே...
அது
சுவைத்துக்கொண்டு இன்பத்தை
தருகிறது வெறும் வார்த்தையை!!!

சமர் !

ஆவலுடன் உன்னில்
நான் மலர் கொய்கிறேன்...
பார்வைகளால் ஏனடி
சமர் செய்கிறாய்?

Monday, June 21, 2010

கண்ணாடி !

உன் கண் நாடி போதுமே
கல்நெஞ்சையும் கரைய வைக்க!
கண்ணாடியூடாக காந்தப்பார்வை எதற்கு?

'கத்ரினா' கயல்விழியே!

'கத்ரினா' கயல்விழியே!
உன் பார்வையால் மோசமாக தாக்கப்பட்ட
இதயத்தை
காதலெனும் வைத்தியசாலையில்
அனுமதித்திருக்கிறேன்..
இதை சுகமாக்க மறுக்கும்
உன் உள்ளம் தான் இன்னும்
விதியில் காலடியில்
சிக்கியவாறே..!