Friday, May 21, 2010

தரை நிலவு!

பேரூந்தில் நீ ஏறுகையில்
ஏக்கமாய் பார்த்தாயே?
அது தந்த தாக்கம்
முழு நாளுமே தொடர்ந்தது!

என் இதயத்தில்
சுகமாய் துயில் கொள்பவளே!
இன்று மட்டும் எனை பார்க்க
தோன்றியதும் ஏனோ?

ஒவ்வொரு நாளும்
நீ
ஏறி மறையும் வரை
நான் காத்திருப்பதை
காதோரம் வந்து
ரகசியம் சொல்லிற்றா
காற்று?

சில சமயங்களில் மட்டும்
என் உணர்வுகளை
மிதித்து நீ நடப்பதன்
தாற்பரியம் தான் என்னவோ?

விலை மதிக்க முடியாத
உன் பாசமதை
வேண்டி நிற்கும் காரணத்துக்காக
கொலைப்பட்டாலும்
உனை நான் பிரிய மாட்டேன்!

உன் நேசத்தை முழுசாய் தந்திட
நீ மறுத்துப் போனாலும்
அன்பினைத் தேடி வேறெங்கும்
திரிய மாட்டேன்!

உன்னுடைய
காதல் கேட்டு
தினமும்
உயிர் தேய்கிற நானும்
தரை மீது வந்துதித்த
உனக்கான ஒரு நிலவு தான்!!!

No comments: