Friday, May 21, 2010

துவம்சத்தில் இதயம்!

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கான
அர்த்தங்கள் எனக்குப் புரிகிறது!

அழகு,அறிவு, ஆற்றல்...எல்லாமே
அதிர்ஷ்டத்தின் முன்
கானல் நீர் தான்!

வாழ்வின் பிடிகளுக்குள்
சிக்கிக் கொண்டதால்
வழிகள் ஏதுமின்றி
இரத்தமும் ஆவியாகிப் போகிறது!

சோர்வு துக்கம் விரக்தி பிணி
எனக்குத்தான் எத்தனை உறவுகள்!

நிமிடங்கள் தோறும்
எச்சரிக்கை மணி
துவம்சிக்கிறது இதயத்தை!

கொடூரமான நினைவுகளில்
ரௌத்திரமாகி
கொதித்து சாகிறது
உயிர் பறவை!

No comments: