Friday, May 21, 2010

இடியாடும் வானமும், புயலாடும் பூமியும் !

ஆக்ரோஷமாக... பாறையில்
ஆவேசத்துடன் மோதியும்
தோல்விகளை சுமந்தே
திரும்புகின்றன
கடலலைகள்!

எஞ்சியிருக்கும் மீதி நாட்களும்
அப்படியே ஆகிடுமோ என்றே
இடியும் புயலும் மனாதில்
நர்த்தனம் செய்கிறது!

என் எண்ணங்கள் எதுவுமே
வண்ணம் பெற்று சிறப்பானதேயில்லை!

கற்பனைக் கடலில்
மிதக்கிறேன் - எனினும்
ஒன்றாவது விற்பனையாகி
ஈடேற்றம் காணாத
கானல் நீர் தான்!

நஞ்சுச் செடியைச் சுற்றி
வேலியிட்டு என்ன பயன்?
முட்டைக்குள்ளே - அழகிய
முத்தொன்றை எதிர்பார்த்ல்
அறிவாகுமா?

பிடிக்கவில்லை எனக்கெதுவுமே..
மலரொன்று முட்களில் வாழ்வதும்..
சிலர் சொற்களில் உயிர்கள் வீழ்வதும்

No comments: