Friday, May 21, 2010

பசியாற்றும் தனிமை!

தூர இருந்தால் தானே
மழைத் தூறல்களுக்குக் கூட
மகிமை!
என்னைத் தான் பிடித்து
தன் பசியாற்றிக் கொள்கிறது
இங்கே தனிமை!

நீ;
நொடிப் பொழுதில்
என் நோய் தீர்த்துச்
சென்றவள்!
கொடி இடையாய்
அந்த மாந்தோப்பில்
நின்றவள்!

உன்னைப் பற்றி இதயத்தில்
எத்தனையோ வண்ணங்கள்!
அவற்றை விட உயிரூட்டுவது
உன் இரு கன்னங்கள்!

மனசைக் கட்டிப்போட்டு
என் உணர்வுகளை
தட்டிய பெண்மையே!
உன்னுடனான
வாழ்க்கை கேட்டு
கெட்டழிகிறேன்
இது உண்மையே!!!

No comments: