Friday, May 21, 2010

பிணமும் மணக்கும் அதன் மனமும் !

ஓவியமாய் என்னில்
நீ
இருப்பதனால்;
காவியம் படைக்க
நினைத்ததும்
சரியே!

பிறரிடம்
காட்டுகிறாய்
மனித நேயத்தை!
ஏனோ
எனக்கு மட்டும் தருகிறாய்
வார்த்தைகளால்
காயத்தை!

எளிமையை விரும்புபவளாய்
நீ இருக்கிறாய்..
தனியாய் நான்
தவிப்பது கண்டு சிரிக்கிறாய்!

அருகிலிருக்கும்
என் இதயத்தை
மிதித்துக் கொண்டு
தூர இருக்கும்
மனிதர்களை நீ
மதிப்பது பற்றி
பெருமைப்படுகிறாய்!

அரக்கனாய்
நான் இருந்த போதும்..
உன் மீது கொண்ட இரக்கம்
குறையாது ஒரு போதும்!

உன்
கண்ணீர்..
அது வெந்நீராய்
எனை சுட்டது பற்றி
உனக்குக் கூட
தெரியாது தான்!

இரட்டை வேஷம்
போட்டது
உனை படுகுழியில்
தள்ளிடவல்ல!
வேஷத்தில்
மறைந்துள்ள
உன் மீதான பாசத்தை
நீ
புரிந்திடு மெல்ல!!!

No comments: