Friday, May 21, 2010

பௌர்ணமியில் வழியும் சுக நரகச் சுவர்க்கம்!

அன்றைய கொடுங்கணங்கள்
இன்னும் கூட - என்
இதயக்குடிசையை முற்றுகையிட்ட படி!

யாருமில்லா
பௌர்ணமி பொய்த்துப்போன
அந்த இரவில்...
நீயம் நானும் தனித்திருந்து
கொடுத்துக் கொண்ட
இதயத்தின் அன்பளிப்புகள்!

உன் செழுமையான பகுதிகள் எனை அழுத்த...
கைகள் வளைத்து
அணைத்துக் கொண்ட
சுகநரகச்சுவர்க்கங்கள்!

குளிர்ந்த பனியின் தாக்கமும்
கொந்தளித்த
இளமையின் ஏக்கமும் இணைந்து
நம்மை நாமே மறந்து போன தருணங்கள்!

உன் கண்ணெறும்பு
என் இதயத்தைக் கடிக்க...
என் கைகள் குறும்புடன்
உன் இடை ஒடிக்க...
இப்படி எத்தனை எத்தனை?

உனக்கு வலிக்மே என்று
மென் விரலைக்கூட
பற்றிட தயங்கிய
எனை மறந்து விட்டு
வேறொருவனுடன்
இணைந்து விட
முடிந்தது பற்றித்தான்
இன்னமும்
நம்ப முடியவில்லை
என்னால்!!!

No comments: